Article

From WikiEducator
Jump to: navigation, search

நெல் சின்னவெங்காயம் மிளகாய் பயிர்களுக்கான தனிப்பசளை சிபார்சுகள்

எம்மால் செய்கை பண்ணப்படும் பயிர்கள் திடகாத்திரமாக வளர்ந்து சிறந்த விளைவைத் தருவதற்கு 16 போஷணைச் சத்துக்கள் அவசியமானவை. இவற்றில் காபன் ஒட்சிசன் இரண்டையும் காற்றில் இருந்தும் ஐதரசனை மணணீரில் இருந்து நைதரசன் பொஸ்பரஸ் பொட்டாஸ்; கல்சியம் மக்னீசியம ;சல்பர் ஆகிய 06 மா போஷணைகளையும் போறன் இரும்பு செம்பு மங்கனீஸ் மொலிப்டினம் சிலிக்கன் நாகம் என்னும் சொற்ப அளவில் தேவைப்படும் நுண்மூலகங்கள் அல்து சுவட்டு மூலகங்களை மண்ணிலிருந்து பெறுகின்றன. இப்போஷணைச் சத்துக்கள் அனைத்தும் சமச்சீராகக் கிடைக்கும்போது பயிர்ச சிறந்த விளைவைத் தருகின்றது.

இவ்வாறு சிறப்பான விளைவைத்தரும் பயிர்கள் மண்ணில் இருந்து அதிகளவு போஷணைச் சத்துக்களை உள்ளெடுப்பதன் மூலம் மண்ணில் இவற்றின் அளவு குறைகின்றது. இக்குறைவை ஈடுசெய்வதற்கு மீண்டும் பசளைகள் இட்பபடாதவிடத்து நாம் செய்கை பண்ணும் பயிhகளில் இருந்து கூடிய விளைவை நாம் பெறமுடியாது போகின்றது. இலாபத்தை நோக்காகக்கொண்டு பயிர் செய்யும்பொது வருமானத்தில் விளைவு இழப்பானது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் சில விவசாயிகள் ஒவ்வொரு பயிர்ச செய்கையின்போதும் நாம் செய்கை பண்ணும் பயிhகளுக்கு இரசாயப்பசளைகளை மட்டுமே இடுகின்றனர். அதுவும் பெரும்பாலான விவசாயிகள் நைதரசன் பொஸ்பரஸ் பொட்டாஸ் என்பவற்றைக்கொண்ட மிளகாய்கலவை வெண்காயக் கலவை வீ கலவை மரக்கறிக்கலவை போன்ற கலவைப்பசளைகளை இடுவதும் அவை கிடைக்காதவிடத்து நெல்லிற்கு சிபார்சு செய்யப்பட்ட வீ கடலவைப்பசளையை மிளகாய் வெண்காயம் போன்ற பயிர்களுக்கு இடு6தம் அவதானிக்பபட்டுள்ளது. இன்னும் சில விவசாயிகள் சேதனப்பசளைகiளான மாட்டெரு கூட்டெரு பசுந்தாட் பசளைகளுடன் கலவைப்பசவளைகளைப் பாவிப்பதும் காணக்கூடியதாக உள்ளது . சேதனப்பசளைகளுடன் இவ்றறைப் பாவிக்கும்போது அனைத்து சுவட்டு மூலகங்கள் எனப்படும் நுண்போஷனைச்சத்துக்களும் பயிருக்கு கிடைப்பதால் பயிர்கள போஷணைச் சத்துக்களும் பயிருக்கு கிடைப்பதால் பயிhக்ள போஷணைக்குறைபாடின்றி திடகாத்திரமாக வளர்நது சிறப்பான விளைச்சலைத் தருகின்றன. இதனால் அதிகரித்த இலாபதர்தைக் கண்ட விவசாயிக்ள அதிக பசளை இட்டால் அதிக pவளைவு பெறலாம் என எண்ணி கூடிய வருமானம் தரும் பயிர்களுக்கு சிபார்சு செய்யப்பட்ட அளவை விட கூடுதலான பசளை இடுவதில் ஆர்வமாக உள்ளதை அவலதானிக்க முடிகிறது.

இதன் விளைவாக மண்ணில் தேவைய்றற நிலையில் நைதரசன் பொட்டாஸ் பொஸ்பரஸ் என்பன தேக்கமடைந்து மண்ணையும் நீரையும் மாசுபடுத்துகின்றன. இதனைக் கவனத்தில் எடுத்து 1990ம் ஆண்டிலிருந்து நேரடிப்பசளைகள் அல்லது தனிப்பசளைகள் என அழைக்கப்படும் யூரியா அடர்சுப்பர் பொஸ்பேற் மியூறியெற்ஒப்பொட்டாஸ் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு மண்ணுக்கும் பிரதேசத்திற்கு பயிர்களுக்கும் ஏற்ற வகையில் நேரடிப்பசளை சிபார்சுகள் அல்லது தனிப்பசளை சிபார்சுகள் செய்யப்பட்டுள்ளன. இச்சிபார்சுகள் நெல் மிளகாய் வெங்காயம் மரக்கறிகள் பழப்பயிர்கள் என்பவற்றிற்கு உள்ளன. இவற்றை தேவையான அளவில் கலந்து பயிர்களுக்கு இடுவதன் மூலம் பசளை இழப்பு பணவிரையம் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளமுடியும். எமது பிரதான பயிர்களான நெல் வெண்காயம் மிளகாய் என்பவற்றுக்கான தனிப்பசளை சிபார்சுகள் கீழே தரப்படுகின்றன. ஒரு ஏக்கரில் செய்கை பண்ணப்படும் (24 பரப்பு) நெற்பயிருக்கு அடிக்கட்டுப்பசளையாக விதைக்க முன் யூறியா – 05 கிலோ கிராமும் அடர்சுப்பர் பொஸ்பேற் 25 கிலோகிராமும் அடர்சுப்பர் பொஸ்பேற் 25 கிலோகிராமும் மியூறியேட் ஒப்பொட்டாஸ் 15 கிலோ கிராமும் இடப்படல் வேண்டும்.

மேற்கட்டுப்பசளையாக 3 மாத இனத்திற்கு வுpதைத்து 2ம் கிழமையின்பின் யூறியா – 25 கிலோ கிராமும்

       5ம் கிழமையின்பின யூறியா – 40 கிலோ கிராமும்
       7ம் கிழமையின்பின் ய+றியா – 20 கிலோ கிராமும்
                   ஏம்.ஓ.பி    - 10 கிலோ கிராமும்

மேற்கட்டுப்பசளையாக 4 மாத இனங்களுக்கு


      2ம் கிழமையின்பின் யூறியா – 25 கிலோ கிராமும்
      5ம் கிழமையின்பின யூறியா – 40 கிலோ கிராமும்
       7ம் கிழமையின்பின் ய+றியா – 20 கிலோ கிராமும்
                   ஏம்.ஓ.பி    - 10 கிலோ கிராமும்